எனதருமை தோழனே!
இன்று உன்னை கடைசியாக பற்ற வைக்கிறேன்.. கொஞ்சம் கவனமாகவும்!! நாளை முதல் உன்னை பார்த்தாலும், மற்றவர்கள் கைகளில் நீ தவழ்ந்தாலும் சிறு புன்முறுவலுடன் கடந்து செல்வேன்..
வழக்கத்தை விட இன்று உன் கங்கு பிரகாசமாக எரிகிறதே.. கோபமா.. இருக்கட்டும்.. எனக்காக எப்போதும் உன்னை எரித்துக்கொள்கிறவனாயிற்றே.. கோபப்பட உரிமையுண்டு தோழா.. அதுமட்டுமில்லாமல் இந்த உதடுகளையும் நேசிக்கும் நல்லிதயம் நீ அல்லவோ..
நீ எப்போது என் வாழ்க்கையில் வந்தாய்? யார் எனக்கு உன்னை அறிமுகப்படுத்தியது? மறந்தேபோனது.. ஆனால் பல ஆண்டுகளாக நீ என்னோடு இருந்திருக்கிறாய்.. தோல்விகளின் போது தோள் கொடுக்கும் தோழனாய், பசியின் போது உணவாய், தனிமையின் போது அரணாய் என்றும் நீ என்னோடு இருந்திருக்கிறாய்.
என் மதிப்பு எப்படி சிறிது சிறிதாக உயருகிறதோ அதுபோல் உன் மதிப்பும் உயருகிறது. இன்று உன் விலை 10 ரூவாயாமே.. நல்லது . உன் மதிப்பு இன்னும் உயரவேண்டும்...
ஏன் இந்த பிரிவு! என உதட்டை சுட்டு நீ கேட்பது வாய் வழியாக மூளைக்கு புரியதான் செய்கிறது. காசை சேமிக்க என சொல்லி ஏமாற்ற முடியாது. ஏனென்றால் பஞ்ச காலத்தில் பஞ்சு வரை உன்னை ருசித்தவன் நான்.. உடல்நலம் பாதிக்கிறது.. இது வேன்றுமென்றால் கொஞ்சம் உண்மை.. உன்னால் எனக்கு சில உபாதைகள் தான். ஆனால் அதுவும் காரணமல்ல..
பின் ஏன்?
உன்னை விளையாட்டாக பற்றவைத்தான்.. முதலில் எல்லாமே விளையாட்டு தானே... பின் நண்பனாவே மாறிப்போனாய்..
எனக்கு எப்போதும் ஆறுதலாக நீ இருந்தாய்.. இதோ காரணம்,, இதுவே காரணம்.. ஆறுதலாய் நீ இருந்தாய்.. இப்போது ஆறுதல் தேவையில்லை.. சுற்றி நல்ல மனிதர்கள் உள்ளார்கள்.. விரைவில் நல்லவர்கள் வரவுள்ளனர். இனி நீ எனக்கு தேவையில்லை..
நமது காதல் முடிந்துபோனது.. நண்பர்களுக்கு இது புரிய கொஞ்சம் நாளாகும்... மீண்டும் உன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்துவார்கள்.. உன்னை என் உதட்டில் திணிக்க முயல்வார்கள்.. அவர்களிடம் சொல்ல வேண்டும் காதல் ஒருமுறை தான் வருமென்று.. குறிப்பாக ஒருமுறை காதலித்த ஒருவரிடமோ ஒரு பொருளிடமோ மீண்டும் காதல் வராது என்றும் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்..
ஐயோ, இது என்ன! நீயாகவே அணைந்துவிட்டாய்..ஓ, இனி நான் உன்னை அணைக்க மாட்டேன் என்பதாலோ..
ஆம் இனி நான் உன்னை அணைக்கவும் மாட்டேன்.. “அணைக்கவும்” மாட்டேன்..
இன்று உன்னை கடைசியாக பற்ற வைக்கிறேன்.. கொஞ்சம் கவனமாகவும்!! நாளை முதல் உன்னை பார்த்தாலும், மற்றவர்கள் கைகளில் நீ தவழ்ந்தாலும் சிறு புன்முறுவலுடன் கடந்து செல்வேன்..
வழக்கத்தை விட இன்று உன் கங்கு பிரகாசமாக எரிகிறதே.. கோபமா.. இருக்கட்டும்.. எனக்காக எப்போதும் உன்னை எரித்துக்கொள்கிறவனாயிற்றே.. கோபப்பட உரிமையுண்டு தோழா.. அதுமட்டுமில்லாமல் இந்த உதடுகளையும் நேசிக்கும் நல்லிதயம் நீ அல்லவோ..
நீ எப்போது என் வாழ்க்கையில் வந்தாய்? யார் எனக்கு உன்னை அறிமுகப்படுத்தியது? மறந்தேபோனது.. ஆனால் பல ஆண்டுகளாக நீ என்னோடு இருந்திருக்கிறாய்.. தோல்விகளின் போது தோள் கொடுக்கும் தோழனாய், பசியின் போது உணவாய், தனிமையின் போது அரணாய் என்றும் நீ என்னோடு இருந்திருக்கிறாய்.
என் மதிப்பு எப்படி சிறிது சிறிதாக உயருகிறதோ அதுபோல் உன் மதிப்பும் உயருகிறது. இன்று உன் விலை 10 ரூவாயாமே.. நல்லது . உன் மதிப்பு இன்னும் உயரவேண்டும்...
ஏன் இந்த பிரிவு! என உதட்டை சுட்டு நீ கேட்பது வாய் வழியாக மூளைக்கு புரியதான் செய்கிறது. காசை சேமிக்க என சொல்லி ஏமாற்ற முடியாது. ஏனென்றால் பஞ்ச காலத்தில் பஞ்சு வரை உன்னை ருசித்தவன் நான்.. உடல்நலம் பாதிக்கிறது.. இது வேன்றுமென்றால் கொஞ்சம் உண்மை.. உன்னால் எனக்கு சில உபாதைகள் தான். ஆனால் அதுவும் காரணமல்ல..
பின் ஏன்?
உன்னை விளையாட்டாக பற்றவைத்தான்.. முதலில் எல்லாமே விளையாட்டு தானே... பின் நண்பனாவே மாறிப்போனாய்..
எனக்கு எப்போதும் ஆறுதலாக நீ இருந்தாய்.. இதோ காரணம்,, இதுவே காரணம்.. ஆறுதலாய் நீ இருந்தாய்.. இப்போது ஆறுதல் தேவையில்லை.. சுற்றி நல்ல மனிதர்கள் உள்ளார்கள்.. விரைவில் நல்லவர்கள் வரவுள்ளனர். இனி நீ எனக்கு தேவையில்லை..
நமது காதல் முடிந்துபோனது.. நண்பர்களுக்கு இது புரிய கொஞ்சம் நாளாகும்... மீண்டும் உன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்துவார்கள்.. உன்னை என் உதட்டில் திணிக்க முயல்வார்கள்.. அவர்களிடம் சொல்ல வேண்டும் காதல் ஒருமுறை தான் வருமென்று.. குறிப்பாக ஒருமுறை காதலித்த ஒருவரிடமோ ஒரு பொருளிடமோ மீண்டும் காதல் வராது என்றும் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்..
ஐயோ, இது என்ன! நீயாகவே அணைந்துவிட்டாய்..ஓ, இனி நான் உன்னை அணைக்க மாட்டேன் என்பதாலோ..
ஆம் இனி நான் உன்னை அணைக்கவும் மாட்டேன்.. “அணைக்கவும்” மாட்டேன்..